Wednesday, July 21, 2010

சென்னை பால மந்திர் ஜெர்மன் ஹால் நிகழ்ச்சிகள்

சென்னை பாலமந்திர் ஜெர்மன் ஹால் அரங்கில் 21.07.2010 அன்று அகில இந்திய சிவாஜி மன்றம், அகில இந்திய பிரபு மன்றம் மற்றும் அகில இந்திய துஷ்யந்த் மன்றம் சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் நினைவு நாள் நிகழ்ச்சியில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் ரசிகர்களுக்கு விருது வழங்குதல் மற்றும் நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்புரையாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் உட்பட பல்வேறு ஆணவங்களைக் காத்து வரும் கிரிஜா அவர்கள், 38 முறை ரத்ததானம் செய்துள்ள திரு ஜெகன் அவர்கள், நடிகர் திலகம் இணைய தளத்தை நடத்திவரும் ராகவேந்திரா அவர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து திருவாளர்கள் நாஞ்சில் இன்பா, அருணன், கே.வி.பி.பூமிநாதன், பொன். விஜயராகவன், ஆர்.கே.செல்வமணி, சிவசக்தி பாண்டியன், சந்திரசேகர், வி.சி.குகநாதன் மற்றும் தளபதி ராம்குமார் ஆகியோர் உரையாற்றினர்.











சென்னையில் நினைவு நாள் சுவரொட்டிகள்